Friday 6 April 2018

தாது மணல் என்பது என்ன?




தாதுமணல் வெறும் மணல் அல்ல! தாதுமணல், இயற்கையாகவே கதிரியக்கத்தன்மைகொண்ட இல்மனைட், கார்னெட், ரூடைல், சிலிகான், மோனோசைட் போன்ற விலைமதிக்க முடியாத தாது உப்புகள் நிறைந்த கனிமப்புதையல் ஆகும். அணுசக்திக்குத் தேவையான இயற்கை கதிர் இயக்கத் தனிமங்கள் அடங்கிய இத்தகைய  தாது மணல் உலகத்தில் இந்தியாவில், அதுவும் தமிழகக் கடற்கரைப் பகுதியில்தான் அதிகம் கிடைக்கிறது.தமிழக கடற்கரை தாதுமணல்-லில் கார்னெட், இலுமினேட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனோசைட் போன்ற தாதுக்கள் உள்ளன. தூத்துக்குடி கடற்கரையோர மணலில் கிடைக்கும் மோனோசைட் தாது அணு ஆராய்ச்சிக்கும், விண்வெளி  ஆராய்ச்சிக்கும் மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும்.சராசரியாக 2 முதல் 5 சதவீதம் வரை மோனோசைட் கடற்கரை மணலில் உள்ளது. இந்த தாதுமணல்-லில் கிடைக்கும் தாதுப்பொருளில் உள்ள தோரியம் மற்றும் யுரேனியம் பிரித்தெடுக்கப்படும்போது கிடைக்கும் மோனோசைட்டுக்கு தனி மதிப்பு கிடைக்கிறது. 






Friday 30 March 2018

தாதுமணல்-மோனோசைட்



தமிழக கடற்கரை தாதுமணல்-லில் கார்னெட், இலுமினேட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனோசைட் போன்ற தாதுக்கள் உள்ளன. 

மோனோசைட் என்றால் என்ன?

செம்மண் நிறத்தில் பாஸ்பேட் கலந்த அரிய வகை தாதுமணல் தாது மோனோசைட். இதில் மோனோசைட், சிஇ, மோனோசைட், எல்.ஏ, மோனோசைட், என்.டி, மோனோசைட் , எஸ்.எம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தோரியத்துக்கான முக்கிய மூலக்கூறாக மோனோசைட் விளங்குகிறது.  இந்தியா, மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவில் மோனோசைட் கிடைக்கிறது. தோரியத்தை பகுப்பதன் மூலம் ராடான் , 220 என்ற கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தியாகிறது. அணுமின் நிலையங்களில் தோரிய பயன்பாடு மிகவும் அதிகம்.

மோனோசைட் தோரியம் அணுக்களை பிளக்க பயன்படுத்தப்படுகிறது. இது மோனோசைட்டை பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி பிரிக்கப்படுகிறது. இந்த தோரியம் கலந்த மோனோசைட் தாதுமணல் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி கடலோர மாவட்ட தாதுமணல்-லில் அதிகம் கலந்துள்ளது. இப்பகுதியில் தாதுமணல்-லை அள்ள அணுசக்தி கழக ஒப்பதல் பெற வேண்டும். ஆனால் கார்னெட், இலுமினேட், ரூட்டைல் போன்ற தாதுக்கள் கலந்த மணல(தாதுமணல்).

Wednesday 28 March 2018

தாது மணலின் வகைகள்


தாது மணல்-லின் வகைகள்:
கார்னெட்(தாது மணல்): மாசற்ற தூய தாது இது.
இதன் பயன்: உப்புக் காற்றால் சேதமான கப்பல், கட்டடங்கள், சிலைகளைத் தூய்மை செய்யவும், கண்ணாடி, செயற்கைக் கரிகள், அலுமினியம், டைட்டானியம் போன்றவற்றைத் துண்டிக்கவும், நீரைச் சுத்தப்படுத்தவும், கணினித்திரை, வால்வுகள், மூக்குக் கண்ணாடி போன்றவற்றை மெருகேற்றவும் இது(தாது மணல்) பயன்படுகிறது.
இலுமனைட்(தாது மணல்): வர்ணங்கள், பிளாஸ்டிக், வெல்டிங்ராடு, டைட்டானியம், விளையாட்டுப் பொருட்கள், மருந்து, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகிறது. இது(தாது மணல்) ரஷ்யாவில் இல்மன் மலை மற்றும் ஏரிப் பகுதியில் முதன்முதலில் எடுத்து ஆய்வு செய்து கண்டறியப்பட்டதால் இலுமனைட் என்று பெயர் பெற்றது.
சிர்கான்(தாது மணல்) : இது(தாது மணல்) 18,000 சென்டிகிரேடு வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மை கொண்டது.
உருக்கு, வார்ப்பு தொழிற்சாலைகளிலும், செராமிக் டைல்ஸ், இரும்பு, உருக்கு ஆலைக் கற்றைகள் தயார் செய்யவும் பயன்படுகிறது. மேலும், மருந்து, சமையல் பாத்திரங்கள், குளியலறை, கழிவறைப் பொருட்கள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
ரூடைல்(தாது மணல்): இது(தாது மணல்) டைட்டானியத்தின் மூலப் பொருள், வர்ணங்கள், பிளாஸ்டிக், வெல்டிங் ராடு, நகை, விண்வெளிக் கருவிகள், ஜவுளிப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.
மோனசைட்(தாது மணல்): தோரியத்தை உள்ளடக்கிய தாதுப் பொருள் இது. அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது. தோரியத்தைப் பகுத்து கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தாது மணல்-லின் மதிப்பு: உலகச் சந்தையில் தாதுக்களின் தேவையும் அதிகம். 
கார்னெட்(தாது மணல்),  ரூஸ்டைல்(தாது மணல்),  சிர்கான்(தாது மணல்), மோனோசைட்(தாது மணல்).
உலகத் தாதுமணல் இருப்பில் பாதியளவு இந்தியாவில் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவும் கிடைக்கின்றன.

மகாராட்டிரா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து குறைவான அளவும் தாது மணல் கிடைக்கின்றன.

தாது மணல் கண்டுபிடிப்பு


தாது மணல் ,ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறைகள் வெயிலில் காய்ந்தும், மழையால் நனைந்தும் வருவதால், வெப்பத்தால் விரிவதும், குளிரில் சுருங்கிச் சிதைவதும் தொடர்ந்து நிகழ்கின்றது. இச்சிதைவில் பல்வேறு கனிமங்கள் உதிர்கின்றன.
உதிர்ந்த இக்கனிமங்கள் மழை பெய்யும்போது, அடித்துச் செல்லப்பட்டு ஓடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. அங்கு ஆற்றோரங்களில் தாதுமணலில் ஒரு பகுதி வண்டல்போல் படிகின்றன.எஞ்சியுள்ள தாதுக்கள் ஆற்று நீரால் அடித்து வரப்பட்டு, கடலில் வந்து சேர்வதால் கடற்கரையை ஒட்டி ஏராளமான கனிமங்கள் பல கன அடியளவு படிகின்றது.கடலைத் தொடர்ந்து போய் வந்து மோதுவதால் கடலின் ஓரம் படிந்துள்ள கனிமங்கள் (இலுமனைட், ரூட்டைல்) கடற்கரையோரம் ஏராளமாய்ப் படிகின்றன. இது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து  நிகழ்வதால் கடற்கரை கனிமவளம் நிறைந்துக் காணப்படுகின்றது.தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அரிய வகை தாது மணல் இருப்பதாக 1905ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின் 1910ம் ஆண்டு தாது மணல் பிரித்தெடுக்கும் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. தாது மணலில் கார்னெட், இல்மினைட், ரூடைல், ஜிர்கான், மேனோசைட், தோரியம் உள்ளிட்ட கனிமங்கள் இயற்கையாகவே கலந்திருக்கின்றன. தாது மணல் பிரித்து எடுக்கும் ஆலை  பின்னர் 1970ல் முழுமையாக அணுசக்தி துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. 

தாது மணல் உருவான விதம்

தாது மணல்,ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறைகள் வெயிலில் காய்ந்தும், மழையால் நனைந்தும் வருவதால், வெப்பத்தால் விரிவதும், குளிரில் சுருங்கிச் சிதைவதும் தொடர்ந்து நிகழ்கின்றது. இச்சிதைவில் பல்வேறு கனிமங்கள் உதிர்கின்றன.
உதிர்ந்த இக்கனிமங்கள் மழை பெய்யும்போது, அடித்துச் செல்லப்பட்டு ஓடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. அங்கு ஆற்றோரங்களில் தாது மணல்-லில் ஒரு பகுதி வண்டல்போல் படிகின்றன.
தாது மணல்-லில் எஞ்சியுள்ள தாதுக்கள் ஆற்று நீரால் அடித்து வரப்பட்டு, கடலில் வந்து சேர்வதால் கடற்கரையை ஒட்டி ஏராளமான கனிமங்கள் பல கன அடியளவு படிகின்றது.
கடலைத் தொடர்ந்து போய் வந்து மோதுவதால் கடலின் ஓரம் தாது மணல்-லில் படிந்துள்ள கனிமங்கள் (இலுமனைட், ரூட்டைல்) கடற்கரையோரம் ஏராளமாய்ப் படிகின்றன. இது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து  நிகழ்வதால் கடற்கரை தாது மணல்-லில் கனிமவளம் நிறைந்துக் காணப்படுகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஓடிவரும் தாமிரபரணி ஆறுகடலில் கலக்கும் பகுதியில் தாது மணல்-லில் வளங்கள் அதிகம் உள்ளன.
தாது மணல் கனிம வளங்களின் அளவு: புவியியல் ஆய்வுத் துறையினர் (ஜி.எஸ்.அய்) ஆய்வின்படி (இந்தியக் கடற்கரையில் சுமார் 2,400 கி.மீ. நீளத்திற்கு நடத்தப்பட்ட ஆய்வு) தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம் வரை இக்கனிமங்கள் உள்ளன.
அணுசக்தித் துறையில் பயன்படும் தோரியம் அடங்கியுள்ள மோனசைட், தொழில்துறையில் பயன்படும் கார்னெட், சிலுமினேட், சிர்க்கான் போன்ற கனிமங்கள் இப்பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன.
தாது மணல் , தென் கடற்கரைப் பகுதியில் சுமார் 9.8 கோடி டன் இலுமனைட்டும் 0.5 கோடி டன் ரூட்டைலும் உள்ளதாக ஆய்வறிக்கைக் கூறுகிறது.
தமிழகத்தின் தென்பகுதி கடற்கரையின் தாது மணல்-லைக் கருமணல் என்று சொல்கிறார்கள். ஏராளமான கனிமங்களை உள்ளடக்கிய இந்த மணலிலிருந்து இலுமனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட், சிலிமினேட், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் பிரித்தெடுக்கப்படு கின்றன.